புதன், 6 பிப்ரவரி, 2008

சிங்கார சென்னையின் முயற்சி

"சென்னை மாநகராட்சி கண்ட இடங்களில் துப்பினாலோ அல்லது குப்பைக் கொட்டினாலோ ஏப்ரல் மாதம் முதல் அபராதம் விதிக்கத் தீர்மானித்துள்ளது

கண்ட இடங்களில் துப்பினால் ரூ.50
கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500
சுற்றுப் புறத்தைத் அசிங்கமாக வைத்திருந்தால் ரூ.1000
" - பத்திரிக்கைச் செய்தி

இப்படித்தான் அரசு பொது இடங்களில் புகைபிடித்தால் 100 ரூபாய் அபராதம் என்று சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டத்தின் மூலமாக யாருக்காவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா தெரியவில்லை? புகை மன்னர்கள் ஹாயாகப் போது இடங்களில் புகை பிடித்து வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கட்டிக் காக்க வேண்டியக் காவல் துறையைச் சேர்ந்த ஒரு சிலரும் பொது இடங்களில் புகை பிடித்துக் கொண்டு நாங்கள் சட்டத்தின் காவலன் என்று பறை சாற்றுகிறார்கள்.

இந்தச் சட்டத்தையாவது மக்கள் ஒழுங்காக கடைபிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையென்றால் பழையச் சட்டங்களைப் போல இதுவும் ஆகுமா? பொறுத்துருந்துப் பார்ப்போம்.

எந்தச் சட்டம் வந்தாலும் மனிதனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் சட்டம் கொண்டு வந்தாலும் பயன் இல்லை.

1 கருத்துகள்:

சொன்னது…

ஏப்ரல் மாதம் என்ற அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டு, இப்பொழுது நாளை முதல் அதாவது ஜீன் 1 முதல் அமல் படுத்துகின்றார்கள். இந்தத் திட்டம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.